×

பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் மதுரையை சேர்ந்த வாலிபர் கைது

திருவில்லிபுத்தூர், ஜூலை 29: விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர்-திருவண்ணாமலை சாலையில் தாமரை நகரில் வசித்து வருபவர் மகேந்திரன். பழக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி கணேஸ்வரி. கடந்த 16ம் தேதி கணேஸ்வரி வீட்டில் இருந்த போது மங்கி குல்லா அணிந்திருந்த மர்மநபர்கள் வீட்டிற்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி கணேஸ்வரி அணிந்திருந்த ஆறரை பவுன் தாலிச்செயினை பறித்து சென்றனர்.

இதுகுறித்து கணேஸ்வரியின் மகன் பாலாஜி கொடுத்த புகாரின் பேரில் திருவலிபுத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதுதொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் மங்கி குல்லா கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்த கொள்ளை வழக்கில் தொடர்புடைய மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த சந்தோஷை (23) திருவில்லிபுத்தூர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

The post பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் மதுரையை சேர்ந்த வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Madurai ,Thiruvilliputhur ,Mahendran ,Tamarai Nagar ,Tiruvilliputhur-Tiruvannamalai road ,Virudhunagar district ,
× RELATED மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் ஊழியர் மீது காரை ஏற்ற முயற்சி